திருக்குறள் பெருமை
கவிமணி:
``வள்ளுவர் தந்த திருமறையைத் - தமிழ்
மாதின் இனிய உயிர் நிலையை
உள்ளம் தெளிவுறப் போற்றுவமே - என்றும்
உத்தம ராகி ஒழுகுவமே’’என்கிறார்.
ஔவையார்:
”அணுவை அதன் நடுவே துளை செய்து, ஏழு கடல் நீரையும் உள்ளே பெய்து வைத்தாற் போன்ற திருக்குறள்” என்கிறார்.
திரு.வி.கலியாணசுந்தரனார்:
இது வீட்டு நூல், உலக நூல், நாட்டு நூல் என்கிறார்.
இடைக்காடர்:
கடுகை அதன் நடுவே துளை செய்து, ஏழு கடல் நீரையும் பெய்து வைத்தாற் போன்றது என்கிறார்.
பாரதம் இயற்றிய பெருந்தேவனார்:
பாரதம்,இராமாயணம், மனுதர்ம சாஸ்திரம், வேதம் ஆகிய இவையே ஒப்பாகும் என்கிறார்.
மனோன் மணீயம் சுந்தரம் பிள்ளை:
”வள்ளுவர்செய் திருக்குறளை
மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனு நீதி
ஒரு குலத்துக் கொருநீதி” என்கிறார்.