நூல்: நம் குறள் மறை கூறும் ‘இல்வாழ்வு - இன்பியல்’
அசிரியர்: ப. அருளி
ஆய்வறிஞர் - தலைவர்
தூய தமிழ் - சொல்லாக்க அகரமுதலிகள் துறை (பெருந்திட்டம்)
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
இந்நூல் `குறள்’ குறித்ததொரு தெற்றென பொருளை விளக்கும் தெளிந்த நீரோட்டம் போன்ற தன்மையுடையதாகத் தோன்றுகிறது. அருளி அவர்களின் புலமை உலகு நோக்கத்தக்கதாக உள்ளது.
அன்பர் அருளி பேசுவதற்கும் பழகுவதற்கும் இனியவர் என்பது அவருடைய நூலினூடே யாம் புகுந்து தெரிந்ததாம். ( நேரிலும் பரிட்சயம் )
இல்லறம் சார்ந்த கூறுகளை மட்டும் எடுத்துக்கொண்டு இல்வாழ்க்கை இன்பமாக அமைய வள்ளுவர் என்ன சொல்லியுள்ளார் என்பதை தன்னுடைய நடையழகில் மிளிரச்செய்துள்ளார்.
புதுச்சேரியை இருப்பிடமாகக் கொண்டு தமிழ்ப்பணி ஆற்றிவரும்
பெருந்தகையாரை மேலும் பல தமிழ்ப்பணிசெய்யும் முகத்தான் வாழ்த்துகிறேன்.